புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பூவைமாநகரைச் சேர்ந்தவர் ராமநாதன்(36). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் வேலை நிமித்தமாக நீலகிரி மாவட்டம், குன்னூரில் வசித்து வருகிறார். ராமநாதன் தனது சொந்த ஊரான பூவைமாநகருக்கு அடிக்கடி வந்து சென்றபோது அவரது அண்ணன் மகளுடன் நெருக்கம் ஏற்பட்டு பின் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் உறவினர்கள் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் ராமநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.