புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அன்வர் ராஜா (33). இவர் பைக் வாங்கி விற்கும் தொழில் செய்துவந்தார். ராமநாதபுரம் மாவட்டம், பேய்க்கரும்புச் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாண்டி (27). இவர் கோட்டைப்பட்டினத்தில் தங்கி மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கோட்டைப்பட்டினம் மீனவக் காலனியைச் சேர்ந்தவர் அசன்மைதீன் (35). இவரும் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் அடிக்கடி இரவு நேரத்தில் ஒன்றாக சந்தித்து மது அருந்துவது வழக்கம். தற்போது கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால், மதுபானம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். போதை இல்லாமல் விரக்தியடைந்த இவர்கள் சேவிங் செய்த பின் முகத்தில் தடவும் லோஷனை வாங்கிச் சென்று கோட்டைப்பட்டினம் தர்கா அருகே அமர்ந்து சோடாவுடன் கலந்து அருந்தி உள்ளனர்.