தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 11, 2019, 2:57 PM IST

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

புதுக்கோட்டை: பதினைந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

sexual harassment

புதுக்கோட்டை மாவட்டம் அருளழகி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவரது மகள் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் புஷ்பராஜ் (26) என்ற இளைஞர் தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் இது குறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர். புஷ்பராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றம் நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புஷ்பராஜுக்கு போக்சோ சட்டத்தில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details