தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 27, 2019, 6:44 AM IST

ETV Bharat / state

65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்! போலீஸ் விசாரணை

புதுக்கோட்டை: மீமிசல் அருகே 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் தூக்கில் தொங்கியபடி இருந்ததால், அது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஆலத்தூர் தெற்கு குடியிருப்புப் பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரத்தில், 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் தொங்கிக் கொண்டிருப்பதாக மீமிசல் காவல்துறையினருக்கு, அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அதனடிப்படையில் மீமிசல் காவல் அலுவலர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தார். இறந்து கிடந்த நபர் எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலையா தற்கொலையா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details