புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண்சக்தி குமார் பதவியேற்றார். இவர் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் என்றாலும், ஐபிஎஸ் ஆவதுதான் இவரது வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. முன்னதாக திருநெல்வேலியில் பணியாற்றிய இவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டையில் குற்றங்களைத் தடுக்க சிறப்புக் குழுக்கள் - எஸ்.பி. அருண் சக்திகுமார்
புதுக்கோட்டை: குற்றங்களைக் களைய பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றுவோம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இவர், "அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு புதுக்கோட்டையில் 1500-க்கு மேற்பட்ட காவல் துறையினர் பல்வேறு இடங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும். குறிப்பாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது, கடைகளை உடைப்பது, பொதுச் சொத்துகளை சேதம் செய்வது உள்ளிட்ட எந்த ஒரு பிரச்னையில் யாரும் ஈடுபடக் கூடாது. குற்றங்களைத் தடுப்பதற்கு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றுவோம்" என்று தெரிவித்தார்.