தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 16, 2020, 3:36 PM IST

ETV Bharat / state

லோடுவேன் கவிழுந்து லோடுமேன் உயிரிழப்பு

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே காயாம்புஞ்சையில் நடந்த சாலை விபத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

load van
load van

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பாண்டிமான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் லோடுமேனாக பணியாற்றி வருகிறார். இவர் பொன்னமராவதியில் இருந்து நெற்குப்பைக்கு கம்பி லோடு ஏற்றிச்சென்ற வாகனத்தில் சென்றுள்ளார். வாகனத்தை அடைக்கன் என்பவர் ஓட்டியுள்ளார்.

வாகனம் காயாம்புஞ்சை சாலையைக் கடந்துசெல்லும்போது வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் சுப்பரமணியன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து அறிந்த பொன்னமராவதி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சுப்பரமணியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: விமான நிலைய அலுவலர்கள் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம்!

ABOUT THE AUTHOR

...view details