புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பாண்டிமான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் லோடுமேனாக பணியாற்றி வருகிறார். இவர் பொன்னமராவதியில் இருந்து நெற்குப்பைக்கு கம்பி லோடு ஏற்றிச்சென்ற வாகனத்தில் சென்றுள்ளார். வாகனத்தை அடைக்கன் என்பவர் ஓட்டியுள்ளார்.
வாகனம் காயாம்புஞ்சை சாலையைக் கடந்துசெல்லும்போது வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் சுப்பரமணியன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.