புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மேல்நிலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன்-இந்திரா காந்தி தம்பதி. அவர்களது மகன் அருண்பாண்டியன் (26) மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். அதன் காரணமாக வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துவந்துள்ளார்.
பாலச்சந்திரன் பலமுறை அவரைக் கண்டித்தும் கேட்டபாடில்லை. அதைத்தொடர்ந்து நேற்று இரவு வழக்கம்போல அருண்பாண்டியன் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதில் ஆத்திரமடைந்த பாலச்சந்திரன் அவரைக் கட்டையால் தாக்கியுள்ளார். அதில் காயமடைந்த அருண்பாண்டியன் உயிரிழந்தார். அதையடுத்து பாலச்சந்திரன் மகனை கொன்ற விரக்தியில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.