தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 10, 2021, 1:51 PM IST

ETV Bharat / state

கூட்டணிக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கியதால் திமுகவினர் ஆர்பாட்டம்

புதுக்கோட்டை: அறந்தாங்கி தொகுதி மீண்டும் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கியதால் திமுகவினர் ஆர்பாட்டம்
கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கியதால் திமுகவினர் ஆர்பாட்டம்

அறந்தாங்கி தொகுதி மீண்டும் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானதையடுத்து, அறந்தாங்கி பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் இன்று (மார்ச்.10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு முறையாக சட்டபேரவைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை திமுகவிற்கு அத்தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும், உதயசூரியன் சின்னத்தை அளிக்க வேண்டியும் ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திமுகவினர் ஆர்பாட்டம்

இந்த ஆர்பாட்டத்தில் ராஜா என்ற திமுக தொண்டர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த டீசலை மேலே ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:உத்தரகாண்டின் புதிய முதலமைச்சராக தீரத் சிங் ராவத் தேர்வு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details