பெரம்பலூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளராக இருப்பவர் ராம்குமார் பொங்கல் பண்டிகையொட்டி டாஸ்மாக் விற்பனையாளர்கள், பார் உரிமையாளர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து டாஸ்மாக் மேலாளர் ராம்குமாரை தொடர்ந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் பெரம்பலூர், அரியலூரை இணைக்கும் சாலையில் பேரளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த ராம்குமாரை மடக்கிப் பிடித்தனர்.
தொடரும் லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி!
பெரம்பலூர்: டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்ததில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனை
பின்னர், பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் சுலோக்சனா, ரத்தினா அம்பாள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தததில் கணக்கில் வராத 90,000 பணம் கைப்பற்ற பட்டபட்டுள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
TAGGED:
பெரம்பலூர் செய்திகள்