தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 30, 2019, 3:33 AM IST

ETV Bharat / state

ஆசிரியர் சந்தேக மரணம் - போலீசார் விசாரணை

பெரம்பலூர்: அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டில் தனியாக இருக்கும்போது சந்தேகமான முறையில் மரணமடைந்துள்ளதால் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

perambalur

பெரம்பலூரில் ஆலத்தூர் வட்டம் கொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பூபதி என்பவர் நான்கு ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர். சிறுவாச்சூர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் இவரும், பூபதியுடன் பணிபுரியும் தலைமையாசிரியர் முத்துக்குமார் என்பவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

ரத்தக்கறைகளுடன் இறந்துக்கிடந்த பூபதி

கடந்த 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை முத்துக்குமார் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூபதி ரத்தக்கறைகளுடன் உயிரிழந்துள்ளார். பூபதி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு சாப்பிடாமல் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆயினும் அவர் வீட்டில் தனியாக இருக்கும்போது ரத்தக்காயங்களுடன் இறந்துள்ளது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா? என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 13 வயது பெண் சிறுமி கொடூர கொலை: வன்புணர்வு செய்யப்பட்டாரா?

ABOUT THE AUTHOR

...view details