தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 7, 2020, 12:48 PM IST

Updated : Nov 7, 2020, 1:00 PM IST

ETV Bharat / state

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

பெரம்பலூர் : புதிய பேருந்து நிலையம் அருகே வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதிக்கின்ற 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து மாநில அரசு, மத்திய அரசிற்கு துணை போவதற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் !

Last Updated : Nov 7, 2020, 1:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details