தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 17, 2019, 2:38 PM IST

ETV Bharat / state

கொல்லிமலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு!

நாமக்கல் : கொல்லிமலை 63ஆவது கொண்டை ஊசி வளைவில் 200 அடி பள்ளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம், மரத்தில் தூக்கில் தொங்கிய படி அழுகிய சடலமாக மீட்க்கப்பட்டது. இதுகுறித்து வாழவந்தி நாடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Unknown body hanging in Kollihills Forest

நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா மையமாக விளங்கும் கொல்லிமலையில் 63ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே 200 அடி பள்ளத்தாக்குப் பகுதியில், மரம் நட வனத்துறையினர் சென்றபோது, அங்குள்ள ஒரு மரத்தில் ஆண் சடலம் மரத்தில் தூக்கிட்டு அழுகிய நிலையில் தொங்குவதைக் கண்டனர்.

இதனையடுத்து வனத்துறையினர் வாழவந்திநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரின் தகவலை அடுத்து தடய அறிவியல் துறை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் தீபா, சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவ்விடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.

கொல்லிமலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

மேலும் இறந்த நபர் யார், எதற்காக இங்கு வந்தார், எத்தனை நாட்களுக்கு முன்பு இறந்தார் என்பது குறித்தும் விசாரணை செய்து, இறந்து போனவர் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்து யாராவது தூக்கில் தொங்க விட்டார்களா எனவும் வாழவந்தி நாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

உழுதலில் மாற்றத்தை ஏற்படுத்திய விவசாயி!

ABOUT THE AUTHOR

...view details