நாமக்கல்: தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லை அடுத்த புதன்சந்தையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில பொதுச்செயலாளர் மாரியப்பன், "தமிழ்நாடு டாஸ்மாக் கடையில் கடந்த 18 ஆண்டு காலமாக, தற்காலிக ஒப்பந்த தொகுப்பு ஊதியத்தில் 36 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகிறோம். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுவதால், இரவு நேரங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களும், கொள்ளைகளும் டாஸ்மாக் கடைகளில் நடைபெறுகின்றன. இதனால் கடை செயல்படும் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.