நாமக்கல்: திருச்சி சாலையில் கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமாக கிரீன்ஸ் என்ற பெயரிலான தனியார் பல்பொருள் அங்காடியும், குழந்தைகளுக்கான விளையாட்டு மையமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடை ஊழியர்கள் நேற்று (மார்ச்.14) இரவு 9 மணிக்கு வழக்கம் போல் பணிகளை முடித்துவிட்டு பல்பொருள் அங்காடியை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இரவு 11 மணிக்கு மேல் கடையின் பின்புறம் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மளமளவெனப் பரவி, பல் பொருள் அங்காடியின் அனைத்து பகுதிகளிலும் பற்றி எரியத் தொடங்கியது.