நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கந்தம்பாளையம் அருகே நல்லூரில் அமைந்துள்ள இரும்பாலையில் நேற்று முன்தினம் (அக்.,30) பழைய இரும்புகளை உருக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மிகுந்த சத்தத்துடன் பாய்லர் வெடித்தது.
இந்த விபத்தில் பாய்லர் அருகே வேலை செய்து கொண்டிருந்த கவுண்டிபாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் பிரவின்குமார்(22), உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஸ்ராய் (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களை சேர்ந்த 9 தொழிலாளர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட இத்தொழிலாளர்கள் திருச்செங்கொடு, ஈரோடு, கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.