கோவிட்-19 வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 30 பேர் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை உறுதி செய்துள்ளது.
இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊடரங்கு அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பலர் இதன் தீவிரம் புரியாமல் வெளியில் சுற்றி வருகின்றனர். இதனை தடுக்க தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியே வரும் பொதுமக்களின் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தியும் கலைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பொதுமக்களின் நடமாட்டம் கூடுதலாக காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பரமத்திவேலூர் காவல்துறையினர் சார்பில் புதிய யுக்தி கைக்கொள்ளப்பட்டுள்ளது.