தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலிண்டர் விலை உயர்வு: திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

By

Published : Dec 21, 2020, 6:40 PM IST

திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

அத்தியாவசியப் பொருட்களில் முதன்மையான பொருளாக உள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, இந்த ஆண்டு மட்டும் ஐந்து முறை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக டிசம்பர் மாதம் இரண்டு முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் அண்ணா சிலை முன்பு திமுக மகளிர் அணி தலைவி ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

அப்போது அவர்கள், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டியும் கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: சமையல் எரிவாயு விலை உயர்வு : சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details