தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 19, 2020, 2:53 PM IST

ETV Bharat / state

வீட்டில் இருந்தவர்களைக் கட்டிப்போட்டு கத்திமுனையில் 60 சவரன் நகை கொள்ளை!

நாமக்கல் : கால்நடை மொத்த மருந்து விற்பனையாளரின் வீட்டிற்குள் புகுந்த ஆறு பேர் கொண்ட கும்பல், கத்திமுனையில் பெண்ணை மிரட்டி 60 சவரன் நகையைத் திருடிச் சென்றனர்.

crimw
rimw

நாமக்கல் - மோகனூர் சாலை முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 50). இவர் கால்நடை மருந்து மொத்த விற்பனை, கோழிப்பண்ணைகள் நடத்துவது உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று (நவ.18) நள்ளிரவு ராதாகிருஷ்ணனின் வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது, ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே வந்துள்ளனர். தொடர்ந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த மூன்று பணிப்பெண்களையும் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு மற்ற அனைத்து கதவுகளையும் வெளிப்புறமாகத் தாழ்ப்பாள் போட்டுள்ளனர்.

அடுத்ததாக, ராதாகிருஷ்ணனின் மனைவி கீதா உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்ற கொள்ளையர்கள், அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பீரோவிலிருந்த 60 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details