நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்கள், மாவட்டக் காவல் அலுவலகம், ஆயுதப்படை வளாகம், உள்கோட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் கனிகள் தரக்கூடிய மரக்கன்றுகளை நட வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
கனிகள் தரும் மரங்களால் அலங்கரிக்கபட உள்ள காவல் நிலையங்கள்!
நாகப்பட்டினம் : மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கனிதரும் மரக்கன்றுகளை நட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
கனி தரக்கூடிய மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி
இதன் அடிப்படையில் நேற்று (நவ.01) மாலை 100க்கும் மேற்பட்ட கனி தரக்கூடிய மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.