தமிழ்நாடு

tamil nadu

பேரவைத் தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறையில் கொடி அணிவகுப்பு

By

Published : Mar 8, 2021, 7:11 PM IST

மயிலாடுதுறை: செம்பனார்கோவிலில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர்.

இந்தோ-திபெத்
இந்தோ-திபெத்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்தமாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.

செம்பனார்கோவில் கடைவீதியில் தொடங்கிய கொடி அணிவகுப்பு, முக்கிய வீதிகள் வழியாக காவல் நிலையம் அருகே முடிவடைந்தது. மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் 40 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், 60 காவல்துறையினர் என மொத்தம் 100 பேர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:சிறுமியை காதலித்து, கடத்தி திருமணம் செய்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details