தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 15, 2020, 9:25 AM IST

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம்: தேசியக் கொடியுடன் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்

நாகை: வடகரை, அரங்கக்குடி இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவுக்கு எதிராக தேசியக் கொடியுடன் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

National Flag
National Flag

அரசியல் அமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவைக் கண்டித்தும் அதனைத் திரும்பப்பெறக் கோரியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வடகரை, அரங்கக்குடி இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடி ஏந்தி பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அரங்கக்குடி கடைவீதியில் தொடங்கிய பேரணி வடகரை கடைவீதியில் முடிவடைந்தது. அங்கு மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு வாக்களித்த அதிமுக அரசைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேசியக் கொடியுடன் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியை முன்னிட்டு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெரியாரை தைரியமாக விமர்சித்தவர் சோ - ரஜினி புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details