தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2020, 2:21 PM IST

ETV Bharat / state

கடல் சீற்றம்: ஆற்றில் மூழ்கிய நாட்டுப் படகுகள்

நாகை: கடும் கடல் சீற்றம் காரணமாக, நாட்டுப் படகுகள் ஆற்றில் மூழ்கின.

கடலில் மூழ்கிய படகுகள்
கடலில் மூழ்கிய படகுகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது.

இதன் காரணமாக நாகை, நாகூர், வேளாங்கண்ணி, புஷ்பவனம், ஆற்காட்டுதுறை உள்ளிட்ட கடலோரப் பகுதி கிராம மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், கடல் சீற்றத்தினால் நாகை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் பைபர், நாட்டுப் படகுகள் ஆற்றில் மூழ்கின.

இதையடுத்து படகுகளில் உள்ள மழைநீரை மோட்டார் மூலம் அகற்றி படகை மீட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details