தமிழ்நாடு

tamil nadu

'தமிழ்நாட்டில் டெல்லியை போன்று வன்முறையாளர்களுக்கு இடமில்லை' - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

By

Published : Feb 28, 2020, 7:09 AM IST

மதுரை: தமிழ்நாட்டில் டெல்லியை போன்று வன்முறையாளர்களுக்கு இடமில்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

mla-rajan-sellappa
mla-rajan-sellappa

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பொதுவாக மதக்கலவரம் தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அடக்கவேண்டும்.

எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

அந்த வகையிலும் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை காக்கும் வகையிலும் போராட்டங்களை முதலமைச்சர் கையாண்டுவருகின்றார். தமிழ்நாட்டில் டெல்லியை போன்று வன்முறையாளர்களுக்கு இடமில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மத்திய அரசு தீர்மானத்திற்கு, அதிலிருக்கும் நிறைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுள்ளார். ஸ்டாலினை பொறுத்தவரையில் குறை கூறிக்கொண்டுதான் இருப்பார்” என்றார்.

இதையும் படிங்க:நாமக்கல் எம்எல்ஏ-வின் தாயார் மறைவு - நேரில் சென்று துக்கம் விசாரித்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details