மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறும்போது, "கீழடி அகழாய்வுப் பணிகள் மூலம் புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுவருகிறது. கலாசாரம், நாகரிகம் பற்றிய தமிழ் மொழியின் தொன்மை, பண்டைய நாகரிகம் ஆய்வுத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே கீழடி அகழாய்வு பணிகள் குறித்த வெளியீடுகள் தொடர வேண்டும்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி இறைத்துவருகிறார். நேற்றைக்கு கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏதுவாக வரியை குறைத்துள்ளனர். இதனால் கார்ப்பரேட் முதலாளிகள் ஆனந்தக் கூத்தாடிவருகின்றனர். இந்தியாவின் அடிப்படை மோடி அரசால் தகர்க்கப்படுகிறது.