தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த பயணத்தின் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்த அவர், நேற்று ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் மதுரை புறப்பட்டார்.
தெலங்கானா முதலமைச்சர் மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம்!
மதுரை: உலக பிரசித்திப் பெற்ற அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் குடும்பத்தோடு வந்து, சாமி தரிசனம் செய்தார்.
chandrasekhar rao
மதுரை வந்தடைந்த அவர், அங்கு அமைந்துள்ள உலக புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தனது குடும்பத்தோடு வந்த அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் வருகையையொட்டி நான்கு மாசி வீதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு கார் மூலம் விமான நிலையம் சென்ற முதலமைச்சர், அங்கிருந்து விமானம் மூலம் தெலங்கானா புறப்பட்டார்.