கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு அமலில் இருந்து வந்தாலும், தினக் கூலித் தொழிலாளர்கள், குடிபெயர் தொழிலாளர்கள், சிறு, குறு வியாபாரிகள் என பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில், ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால் ஆட்டோ, வாடகைக் கார் ஓட்டுநர்கள் ஒரு புறம் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், மதுரை, எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே உள்ள ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில், தமிழ்நாடு அனைத்து ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டம் குறித்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் தங்கபாண்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, ”கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாகன ஓட்டுநர்களும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். 144 தடை உத்தரவு காரணமாக ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் தமிழ்நாடு முழுவதும் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் துயரத்தில் உள்ளனர்.