தமிழ்நாடு

tamil nadu

தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக அழித்தவர் ராஜபக்ச - இலங்கை எம்பி பேட்டி

By

Published : Sep 4, 2019, 12:06 PM IST

மதுரை: பிரபாகரன் இருந்திருந்தால் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இருக்காது என ராஜபக்சே கூறுவது அரசியல் லாபத்துக்காக மட்டுமே. இலங்கை தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக அழித்தவர் ராஜபக்ச என இலங்கை மட்டகளப்பு எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறியுள்ளார்.

Sri Lanka MP Sinitambi Yogeswaran said rajapaksa is the one who destroyed the Tamil people in clusters

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடைபெற்றது. இதில் இலங்கை மட்டகளப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட சீனித்தம்பி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "விநாயகர் சதுர்த்தி போன்ற ஆன்மிக நிகழ்வுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் எங்களது மட்டகளப்பு பகுதியில் நடைபெற்றது.

இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இந்தத் தாக்குதலை நிகழ்த்தியது. இந்தத் தாக்குதல் குறித்து இந்தியா முன்னரே இலங்கையை எச்சரித்தது. இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்தியா தகவல் அளித்தும் இலங்கை அரசு அதை பொருட்படுத்தவில்லை.

தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக அழித்தவர் ராஜபக்ச

பிரபாகரன் இருந்திருந்தால் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றிருக்காது என ராஜபக்ச கூறுவது அரசியல் லாபத்துக்காக மட்டுமே. இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல. இலங்கை தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக அழித்தவர் ராஜபக்ச" எனக் கூறினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details