தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் ரூ. 6 கோடி மதிப்பிலான கடத்தல் சோலார் பேனல்கள் பறிமுதல்!

வணிக வரி செலுத்தாமல் கடத்திவரப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான சோலார் பேனல்கள், கன்டெய்னர் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

By

Published : Sep 15, 2021, 9:44 PM IST

சோலார் பேனல்கள்
சோலார் பேனல்கள்

மதுரை: மதுரையின் புறவட்டச்சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கன்டெய்னர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அதனை மதுரை வணிகவரித்துறை புலனாய்வுக் குழுவினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் ரூ. 6 கோடி மதிப்புள்ள சோலார் பேனல்கள், உரிய ரசீதுகளின்றி வரி ஏய்ப்பு செய்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து மும்பையில் இருந்து திருநெல்வேலி நோக்கி கொண்டு செல்லப்பட்ட சோலார் பேனல்கள் எங்கிருந்து, யாருக்காக கொண்டு வரப்பட்டன? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது லாரிக்கு ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: மகன் கொலைக்கு பழிதீர்த்த தாய்

ABOUT THE AUTHOR

...view details