மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலப்புதூர் பெட்ரோல் பங்க் எதிரே வசிப்பவர்கள் வீரம்மாள், பரிபூரணம் என்ற இரு சகோதரிகள். இவர்களில் வீரம்மாளுக்கு திருமணம் ஆன நிலையில், மாற்றுத்திறனாளியான பரிபூரணம் திருமணம் ஆகாமலே தங்கையுடன் ஒரே வீட்டில் வசித்துவருகிறார்.
வீரம்மாளுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், அய்யர் என்ற மகனுக்கு பிறந்த முருகானந்தன் மட்டும் இவர்களுடன் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கம்பி வேலைக்கு செல்லும் அவர் தினமும் குடித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.