தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாட்டிகளை கொடூரமாக கொன்ற பேரன்

மதுரை: குடிபோதையில் இருந்த பேரன் தன் பாட்டிகள் இருவரையும் கொன்றச் சம்பவம் உசிலம்பட்டியில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Apr 25, 2019, 10:26 AM IST

பாட்டிகளை கொடூரமாக கொன்ற பேரன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலப்புதூர் பெட்ரோல் பங்க் எதிரே வசிப்பவர்கள் வீரம்மாள், பரிபூரணம் என்ற இரு சகோதரிகள். இவர்களில் வீரம்மாளுக்கு திருமணம் ஆன நிலையில், மாற்றுத்திறனாளியான பரிபூரணம் திருமணம் ஆகாமலே தங்கையுடன் ஒரே வீட்டில் வசித்துவருகிறார்.

வீரம்மாளுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், அய்யர் என்ற மகனுக்கு பிறந்த முருகானந்தன் மட்டும் இவர்களுடன் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கம்பி வேலைக்கு செல்லும் அவர் தினமும் குடித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று மதுபோதையில் வந்த அவர் இரு மூதாட்டிகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் மூதாட்டிகளை அடித்து கொலை செய்ததாக தெரிகிறது.

பரிபூரணம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி காவல்துறையினர் முருகானந்தத்தை கைது செய்தனர். மேலும், கொலை குறித்து அவர்கள் விசாரனை செய்துவருகின்றனர்.

வீரம்மாள்

இரு முதாட்டிகளின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details