தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த அமைச்சர்!

மதுரை: வாடிப்பட்டியில் கரோனா விழிப்புணர்வு வாகனங்களை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

By

Published : Apr 19, 2020, 1:08 PM IST

விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கரோனா தொற்று குறித்தும், பாதுகாப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாலமேடு, அலங்காநல்லூர், சோழவந்தான் பகுதிகளில் 59 வாகனங்களில் ஒலிபெருக்கி தயார் செய்யப்பட்டது.

அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த குறும்படமும் பிரம்மாண்ட திரை கொண்ட வாகனம் மூலம் பொதுமக்கள் பார்வைக்காக தயார் செய்யப்பட்டது.

விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
இதன் தொடக்க விழாவை வாடிப்பட்டி மந்தை திடலில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details