தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 18, 2020, 4:59 PM IST

ETV Bharat / state

டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

மதுரை: ஆரப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடைகளை திறக்கக் கூடாது என பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றை அதன் ஊழியர்கள் இன்று திறக்க வந்தனர். அப்போது அக்கடையை திறக்கவிடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 20க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவலறிந்து சென்ற கரிமேடு காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: எங்கள் குடியைக் கெடுக்கதான் டாஸ்மாக்கை திறந்தீர்களா!

ABOUT THE AUTHOR

...view details