மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகன் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் உள்பட எட்டு பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாலமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து சிகிச்சைக்காக அவர், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினர்தான் விசாரணை என்ற பேரில் அழைத்துச்சென்று அடித்துக் கொன்றுள்ளனர் என்று கூறி பாலமுருகனின் உறவினர்கள் இன்று காலை அரசு இராசாசி மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.