தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 10, 2020, 1:10 PM IST

ETV Bharat / state

பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தையை விட்டுச் சென்ற தாய் - காவல் துறையினர் விசாரணை!

மதுரை: அரசு இராசாசி மருத்துவமனை வாசலில், பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை ஒன்றை தாய். விட்டுச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

madurai-the-mother-who-left-the-baby-girl
madurai-the-mother-who-left-the-baby-girl

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வாசலில் இன்று(அக்.10) அதிகாலை, துணியால் சுற்றப்பட்ட நிலையில் பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை ஒன்று கதறி அழுது கொண்டிருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அக்குழந்தையை மீட்டு குழந்தைகள் சிறப்பு பிரிவில் ஒப்படைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் மோகன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், குழந்தை கிடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், இன்று அதிகாலை 6 மணி அளவில் இரண்டு பெண்கள் அப்பகுதியில் குழந்தையுடன் வருவதும் பிறகு சற்று நேரத்தில் மீண்டும் குழந்தை இல்லாமல் அந்த பகுதியை கடந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக பிரசவிக்கபட்ட தாய்மார்களின் பட்டியலை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரையில் நேற்று கள்ளந்திரி வாய்க்காலில் இறந்த நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்ட நிலையில் இன்று உயிருடன் மற்றொரு பெண் குழந்தை அரசு மருத்துவமனை வாசலில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

விருதுநகரில் ஏழு மாத பெண் குழந்தையின் உடல் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details