தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2019, 8:22 AM IST

ETV Bharat / state

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டம்

மதுரை: டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் முன்பாக வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

lawyers-meeting-at-madurai-

டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் சங்கங்களின் சார்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் பிரதான வாயிலில் அமைந்துள்ள காந்தி சிலையின் முன்பாக நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானங்களை நிறைவேற்றினர்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர்கள் இளங்கோவன் சாமிதுரை மணவாளன் முன்னிலையில் இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க: ’உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம்’ - வைகோ திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details