கொடைக்கானல் படகு குழாம் கௌரவச் செயலாளர் ராமச்சந்திர துரைராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்," கொடைக்கானல் போட் கிளப் சார்பில், கடந்த 1906 அக்டோபர் 12-இல் 6 சென்ட் நிலம் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டது.
பின்னர், 1921இல் அரசிடம் 49 ஆண்டு கால குத்தகைக்கு 8 சென்ட் நிலம் பெறப்பட்டது. அந்த நிலத்தில் கொடைக்கானல் ஏரியில் படகு விடுவதற்காக படகு குழாம் கட்டப்பட்டது.
ஒவ்வொரு 49 ஆண்டுகளின் போதும் குத்தகை காலம் முறையாக நீட்டிக்கப்பட்டது. கொடைக்கானல் போட் கிளப்பில், தற்போது 1,153 உறுப்பினர்கள் உள்ளனர்.
கொடைக்கானல் போட் கிளப்பை ஒலிம்பிக் சங்கமே, கடந்த 129 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் ஏரியில் இயங்கும் படகுகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும் என, 1987இல் நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு, படகு குழாமுக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் கொடைக்கானல் ஏரியை நகராட்சி வசம் ஒப்படைத்து, 2009 ஜூன் 26ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஏரியில் மீன்பிடிப்பதற்கான உரிமம் மீன்வளத்துறை இடம் இருந்தது.