தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் அமைய வேண்டி குடும்பத்துடன் வந்து வழிபட்டோம். அதிமுக ஆட்சியில்தான் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை 1ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.