மதுரை, பழங்காநத்தம் காளவாசல் புறவழிச்சாலை அருகே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹபீப் என்ற வடமாநில ஓட்டுநர், கன்டெய்னர் லாரி ஒன்றை ஓட்டி வந்துள்ளார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனால், லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஒரு சில வாகனங்கள் மீது உராய்ந்து திடீரென சாலை ஓரத்தில் நின்று உள்ளது.
நெஞ்சுவலி காரணமாக மயங்கி லாரியிலிருந்து கீழே விழுந்த ஓட்டுநர் ஹபிப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.