மதுரை:மதுரை, அவனியாபுரம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றியவர் ஸ்ரீமுருகன். இவர் நிர்வாகக் காரணங்களுக்காக தூத்துக்குடிக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கர்மாவின் கொள்கைப்படி மனுதாரருக்கு நிவாரணம் தர நீதிமன்றம் விரும்புவதாக கூறி, தூத்துக்குடி மாவட்ட பணிமாற்றம் செய்ததை ரத்து செய்து மதுரை மாவட்டத்திற்கு போக்குவரத்து காவலராக மாற்றம் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து தென்மண்டல ஐஜி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த அமர்வு நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தது. பணி மாறுதல் செய்யப்பட்ட முருகன் தரப்பில் அமர்வு நீதிபதிகள் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்ய கோரி மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு முந்தைய விசாரணையில் ஏற்கனவே நிலுவையில் உள்ள தென் மண்டல ஐஜி மேல் முறையீட்டு மனுவுடன் மனுதாரர் மேல்முறையீட்டு மனுவையும் சேர்த்து பட்டியலிடுமாறு கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர். இன்று இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.