இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான ரமலானன்று தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் விடுமுறை அறிவித்துள்ளன. நடப்பாண்டில் மே 14ஆம் தேதி ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என கூறப்படுகிறது. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறுமென்பதால் ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ கொண்டாடப்படும்.
இதை கணக்கில் கொள்ளாமல், நடப்பாண்டு சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளின் தேர்வுகள் மே 13, 15 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.