மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஐயப்பன்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மேலூர் தாலுகா, சுண்ணாம்பூர் கிராமத்தில் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக தூத்திரி, கீரனூர் பாசன குளங்கள் உள்ளன. ஆனால், தனிநபர் ஒருவர் 3 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவில் கீரனூர் கிராமத்தில் மணல் குவாரியை நடத்தி வருகிறார்.
எட்டு இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் ஆழமாக மணல் எடுக்கப்பட்டு, 800 லாரிகள் மூலமாக வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதற்கு முறையாக அனுமதியும் பெறப்படவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.