தமிழ்நாடு

tamil nadu

இலங்கை விவகாரம் குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

மதுரை: இலங்கை குண்டுவெடிப்பில் மதுரை ஆட்சியருக்கு நேரடியாகத் தொடர்பிருப்பதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வழக்கறிஞர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

By

Published : May 1, 2019, 12:09 PM IST

Published : May 1, 2019, 12:09 PM IST

வழக்கறிஞர்

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மதுரை ஆட்சியர் நாகராஜுக்கு நேரடியாகத் தொடர்பிருப்பதாகவும், அவர் ராமநாதபுரத்தில் பணிபுரிந்த போதே தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.எம் சாமி வாட்ஸ் அப்பில் காணொளி வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

மேலும், தமிழ்நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து, வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பி பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கறிஞர் சி.எம்.சாமி மீது வழக்குப்பதிவு செய்துள்ள தல்லாகுளம் காவல் துறையினர், தலைமறைவாக உள்ள அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details