இது குறித்து இன்று (மே.26) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அன்றாட வாழ்க்கைக்கே அல்லாடும் சாமானிய மக்களின் சேமிப்புகள் இவை.
இந்த அஞ்சல் அலுவலக சிறு சேமிப்புகள், (Recurring Deposits (RD), Public Provident Fund (PPF), Suhanya Samriddhi Yojana (SSA)) - தவணைகளுக்கு காலக்கெடு உண்டு. அதற்குள் கட்டத் தவறினால் தண்டத் தொகை உண்டு. காலாவதியாகி விடும். அதைப் புதுப்பிப்பதற்கு கட்டணம் உண்டு. இதில் சுகன்யா திட்டம் பெண் குழந்தைகளுக்கானது.
கடந்த ஆண்டு நிதியமைச்சகம் இச்சேமிப்புகளின் தவணையைச் செலுத்துவதற்குக் கால நீட்டிப்பு தந்தது. தண்டத் தொகையை ரத்து செய்தது. புதுப்பித்தல் கட்டணங்களையும் தள்ளுபடி செய்தது. (பார்வைக்கு - எப். எண் 113-03/2017- SB / தேதி 31.03.2020 - இந்திய அரசு, தகவல் தொடர்பு அமைச்சகம், அஞ்சல் துறை).