மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பௌர்ணமி உற்சவ விழா, கிரிவலம் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், இந்தாண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவிருந்த பௌர்ணமி கிரிவல நிகழ்ச்சி கரோனா தொற்றுக் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மேற்கண்ட நாளில் கிரிவலம் வருவதை தவிர்த்திட வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.