மதுரை மாவட்டம் எஸ்.ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்திய பிரியா என்பவரின் இரண்டாவது மகன் திருமலேஷ், டெங்கு காய்ச்சலால் கடந்த மாதம் 22 ஆம் தேதி பாதிக்கப்பட்டார்.
பின்னர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அந்தப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜமாணிக்கம் என்பவரது ஆறு வயது மகன் சாய்சரணுக்கு, கடந்த 3 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்தது.