மதுரை: கூடல் புதூர் அசோக் நகர் 2ஆவது தெருவில் பாதாள சாக்கடை தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச்சேர்ந்த தொழிலாளி சக்திவேல் எதிர்பாராத விதமாக தோண்டப்பட்ட குழியின் உள்ளே தவறி விழுந்தார்.
கடந்த சில நாட்களாக மதுரை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்துவரும் நிலையில் புலிகள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆகையால், தவறி விழுந்த தொழிலாளி சக்திவேல் உயிரிழந்திருக்கலாம் என சகத்தொழிலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.