தமிழ்நாடு

tamil nadu

வங்கி மேலாளர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை!

மதுரை: வங்கி மேலாளர் வீட்டில் 80 சவரன் நகை, மூன்று லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Dec 11, 2019, 1:50 PM IST

Published : Dec 11, 2019, 1:50 PM IST

Theft in Madurai Bank Manager residence
Theft in Madurai Bank Manager residence

மதுரை அழகிரி நகர் பகுதியில் வசித்து வருபவர் வங்கி மேலாளர் தனசேகரன். இவர், டிசம்பர் 1ஆம் தேதி குடும்பத்துடன் சென்னை சென்றார். பின்னர் இன்று காலை ஊர் திரும்பிய தனசேகரன், வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 80 சவரன் நகை, மூன்று லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தனசேகரன் அளித்த புகாரின் அடிப்படியில், சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளை நடந்த வீடு

மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வங்கி மேலாளர் வீட்டில் 80 சவரன் நகை, மூன்று லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தலைமை ஆசிரியர் வீட்டில் 66 சவரன் தங்கநகை திருட்டு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details