மதுரை அழகிரி நகர் பகுதியில் வசித்து வருபவர் வங்கி மேலாளர் தனசேகரன். இவர், டிசம்பர் 1ஆம் தேதி குடும்பத்துடன் சென்னை சென்றார். பின்னர் இன்று காலை ஊர் திரும்பிய தனசேகரன், வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 80 சவரன் நகை, மூன்று லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தனசேகரன் அளித்த புகாரின் அடிப்படியில், சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.