மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''G ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை குறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை. நான் பாஜக தலைவராக இருந்தபோது அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறேன்.
அனைத்துக் கட்சியினருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு. அதன் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரது கருத்தை தெரிவித்து இருக்கிறார். பாஜக கட்சி குறித்து, தற்போதைய தலைவர்களிடம் கேளுங்கள். என்னை இதில் இழுத்துவிடாதீர்கள்.