கிருஷ்ணகிரி அருகே உள்ள பாறைகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (23), கோவிந்தராஜ் (23) ஆகிய இருவரும் ராணுவத்தில் பணியாற்றினர். ராணுவ வீரர்களான இருவரும் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ள நிலையில், இன்று (டிசம்பர் 27) இருசக்கர வாகனத்தில் சின்னமுத்தூர் இணைப்பு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் இருவரும் வேகமாக தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். வேகமாக தூக்கி வீசப்பட்டதில் இருவரும் உயிரிழந்தனர்.