தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 4, 2023, 10:41 PM IST

Updated : Jan 4, 2023, 10:56 PM IST

ETV Bharat / state

டீ குடிக்க சென்ற நபருக்கு திடீரென நடந்த விபரீதம் - சிசிடிவி காட்சி வைரல்

ஓசூர் அருகே கேன்டீனில் டீ குடிக்க சென்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டீ குடிக்க சென்ற நபருக்கு திடீரென நடந்த விபரீதம் - சிசிடிவி காட்சி வைரல்
டீ குடிக்க சென்ற நபருக்கு திடீரென நடந்த விபரீதம்- சிசிடிவி காட்சி வைரல்

டீ குடிக்க சென்ற நபருக்கு திடீரென நடந்த விபரீதம் - சிசிடிவி காட்சி வைரல்

கிருஷ்ணகிரி:ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் அருகே உள்ள ஜிகினியில் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு பணிபுரிந்து வந்த அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி முனிராஜ் என்பவர் டீ குடிப்பதற்காக கம்பெனியில் உள்ள கேன்டீனுக்கு சென்றுள்ளார்.

கேன்டீனில் டீ வாங்கி கொண்டு அங்குள்ள இருக்கையில் அவர் அமர சென்றபோது திடீரென கீழே விழுந்து சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் பயந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜிகினி போலீசார் கேன்டீனில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கேன்டீனில் உள்ள சக தொழிலாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாஜகவில் இருந்து விலகிய சரவணன் அதிமுகவில் ஐக்கியம்!

Last Updated : Jan 4, 2023, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details