கிருஷ்ணகிரி:ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் அருகே உள்ள ஜிகினியில் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு பணிபுரிந்து வந்த அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி முனிராஜ் என்பவர் டீ குடிப்பதற்காக கம்பெனியில் உள்ள கேன்டீனுக்கு சென்றுள்ளார்.
கேன்டீனில் டீ வாங்கி கொண்டு அங்குள்ள இருக்கையில் அவர் அமர சென்றபோது திடீரென கீழே விழுந்து சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் பயந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.