பெங்களூருவிலிருந்து ரெம்டெசிவிர்மருந்தை காரில் கடத்தி வந்து தமிழ்நாட்டில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக, ஓசூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி மூக்கண்டப்பள்ளி என்னுமிடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு வந்த காரில் 9 ரெம்டெசிவிர் மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், பெங்களூர் ஏளனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வரும் ஆனந்த் பாலாஜி(37) என்று தெரியவந்துள்ளது.